;
Athirady Tamil News

நெடுந்தீவில் போராட்டம் த.தே.ம.முன்னணி ஏற்பாடு!!

0

நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டையினை சுவீகரிக்கும் நோக்கத்திற்கு எதிரான போராட்டம் எதிர்வரும் புதன்கிழமை (29.03.2023) காலை நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற உள்ளது.

தமிழர்களுடைய ஒரு பூர்வீக வரலாற்றிடமான கோட்டையின் வரலாற்றை திரிபுபடுத்தும் விதமாக இலங்கை அரச தொல்பொருள் திணைக்களத்தினால், அது பௌத்தத்திற்கு சொந்தமான ஒரு இடம் என்பது போன்று சுவீகரிக்கும் நோக்கில் அங்கே அறிவிப்பு பலகை நாட்டப்பட்டிருக்கின்றது அந்த செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தே நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக எதிர்ப்பு போராட்டத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.