;
Athirady Tamil News

கணவன்-மனைவி தற்கொலை செய்தது ஏன்? உருக்கமான தகவல்!!

0

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 46). கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (36) கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவர்களுக்கு ரஞ்சித் (22) என்ற மகனும், நந்தினி (20), அஞ்சலி (17) என மகள்களும் உள்ளனர். நேற்று காலை வழக்கம் போல் அஞ்சலியை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெற்றோர் விட்டில் இருந்தனர். மாலையில் அஞ்சலி வீட்டிற்கு திரும்பியபோது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால் சந்தேக மடைந்த அஞ்சலி வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது பெற்றோர் ராஜா-சரஸ்வதி ஆகியோர் இறந்த நிலையில் கிடந்தை கண்டு அதிர்ச்சியடைந்து கதறினார். அக்கம் பக்கத்தினர் அஞ்சலியின் சத்தத்தை கேட்டு அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த மேட்டூர் டி.எஸ்.பி மரியமுத்து, கொளத்தூர் இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் கதவை உடைத்து பிணமாக கிடந்த ராஜா, அவரது மனைவி சரஸ்வதி ஆகியோர் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது- ராஜாவுக்கும் அவரது மனைவி சரஸ்வதிக்கும் கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் ஒரே வீட்டில் இருந்தாலும் அவர்கள் இருவரும் சரியாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் ராஜா, சரஸ்வதிக்கு சாணி பவுடர் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் கேபிள் வயரால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரது எடை தாங்காமல் கேபிள் வயர் அறுந்து விழுந்துள்ளது. இதையடுத்து ராஜா விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். மேலும் தற்கொலைக்கான முழு காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் அவர்களது தற்கொலைக் கான முழு காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.