;
Athirady Tamil News

கொழும்பில் சீல் வைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம்

0

பிலியந்தலை போகுந்தர பல்வேறு சேவைகள் கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான பிலியந்தலை நகரின் மையப்பகுதியில் உள்ள “சிபெட்கோ” எரிபொருள் நிரப்பு நிலையம் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்றோலிய ஒழுங்குமுறைக் கூட்டுத்தாபனத்தின் நுகேகொட பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடு காரணமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஹொரணை 120 பேருந்து வழித்தடத்தில் பிலியந்தலை காவல்நிலையத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ள பொகுந்தர பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான சிபெட்கோ பெட்றோல் நிலையத்தில் இருந்து எரிபொருள் விநியோகத்தில் முறைகேடு நடப்பதாக பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

திடீர் சோதனை
அதன்படி, நுகேகொடை பிராந்திய அலுவலகத்தின் பகுதி முகாமையாளர் (30) டொன் பிரசன்ன டிலிருக் ஜயசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று இரவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர், எரிபொருள் நிலையத்திலுள்ள அனைத்து பம்புகளும் சீல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.