;
Athirady Tamil News

சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி – பள்ளிகளுக்கு விடுமுறை!

0

பிரதமர் மோடி சென்னை வருகை தந்துள்ளார்.

பிரதமர் மோடி
தமிழகத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, விமான நிலையத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.

இங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலம் அருகே அமைந்துள்ள ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு பிரதமர் மோடி வருகிறார். பின்னர் கார் மூலம் விழா நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கவுள்ளார்.

சென்னை வருகை
இதனால், சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும், 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக நாளை ஸ்ரீரங்கம்,ராமேஸ்வரம் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து தீர்த்தங்களை சேமிக்கவுள்ளார்.

அதன்பின், ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு செல்கிறார். இதனால், அங்கு 12 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு போலீசார் தங்குவதற்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.