;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தானில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0

ஆப்கானிஸ்தானில் 5.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது, ஆப்கானிஸ்தானிம் மசார் இ சரீஃப் என்ற நகரத்தின் அருகே இன்று மாலை உணரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்தியாவின் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நிலநடுக்கம் நிலப்பரப்பிலிருந்து 15 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளது.

பதற்றம்
எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்கள் காரணமாக பொதுமக்களிடையே பெரும் பதற்றம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.