;
Athirady Tamil News

கொழும்பில் சிசிரிவி கமராக்கள் மூலம் சிக்கிய வாகனசாரதிகள்

0

கொழும்பில் உள்ள சிசிடிவி அமைப்பின் ஊடாக போக்குவரத்து விதிகளை மீறிய 793 வாகன சாரதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

போக்குவரத்துப் பிரிவின் சிசிடிவிகள் மூலம் கைப்பற்றப்பட்ட தொடர்புடைய குற்றங்களின் வீடியோ ஆதாரங்கள் சுமார் 300 பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், குற்றங்களுக்கான அபராதப் பத்திரங்கள் உரிய சாரதிகளுக்கு வழங்கப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் டிஐஜி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சிசிடிவி அமைப்பின் ஊடாக கடந்த (22.01.2024) போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளை அடையாளம் காணும் நோக்கில் பொலிஸார் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இத்திட்டம் ஜனவரி 22 ஆம் திகதி தொடங்கப்பட்ட போதிலும், வாகன ஓட்டிகளுக்கு இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் (01.02.2024) ஆம் திகதி முதல் தொடங்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.