;
Athirady Tamil News

யாழில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகள்: இணக்கம் தெரிவித்த இராணுவம்

0

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஒரு மாத காலத்துக்குள் சாதகமான பதிலை வழங்குமாறு இராணுவத்தினருக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விவசாய காணிகள் விடுவிப்பு, இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஆலயங்களுக்கு வழிபட அனுமதிப்பது தொடர்பிலும் ஆராய்ப்பட்ட போதே அதிபரின் உத்தரவு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்நிலையில், 300 ஏக்கர் விவசாய நிலம் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது குறித்து இராணுவத்தினரும் அறிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.