;
Athirady Tamil News

சாரதிக்கு மதுபானம் அருந்த கொடுத்து கார் கொள்ளை

0

கார் சாரதிக்கு மதுபானம் அருந்த கொடுத்து காரை கொள்ளையிட்டுச் சென்ற இருவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாடகை வாகன சேவை நிலையமொன்றில் இருந்து கார் ஒன்றை வாடகைக்கு எடுத்த சந்தேக நபர்கள் அதை கொள்ளையிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மத்தேகொடை மற்றும் கிரிவத்துடுவ பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

ஐஸ் போதைப்பொருள்
கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர்கள் இருவரும் முல்லேரியா பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 5,911 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.