;
Athirady Tamil News

பிரபல உணவகத்தில் பயங்கர வெடி விபத்து… 3 பேர் படுகாயம்… பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்!

0

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு குண்டலஹள்ளியில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் இயங்கி வருகிறது. வழக்கம்போல் பரபரப்பாக காணப்பட்ட உணவகத்தில், இன்று பிற்பகலில் மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில், ஓட்டல் ஊழியர்கள் 3 பேரும், வாடிக்கையாளர் ஒருவரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இந்த வெடிவிபத்தை தொடர்ந்து அப்பகுதி முழுவதையும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். விசாரணையில் ஓட்டலில் இருந்த ஒரு பையில் வைக்கப்பட்டிருந்த பொருள் வெடித்து சிதறியதாக முதற்கட்ட தக்கள்கவல் வெளியாகியுள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.