;
Athirady Tamil News

கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை ; கெஹலிய ரம்புக்வெல்ல

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகவீனம் காரணமாக கெஹலிய , நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் சுகவீனம்
கெஹலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்து, அவரது செயலாளர் ஒருவரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, சபாநாயகரின் பணிப்புரையின் பேரில், அவரை நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்க வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சார்ஜன்ட் தயாரித்திருந்தார்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரம்புக்வெல்ல திடீர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே, கெஹலிய ரம்புக்வெல்ல உடல்நிலை குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிறை ஆணையாளருக்கு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.