;
Athirady Tamil News

கனடாவில் இசையால் நோயாளிகளை கவரும் ஈழத் தமிழ் மருத்துவர்

0

கனடாவின் ஸ்காப்ரோவில் சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒருவர் இசை மூலம் அவர்களை மகிழ்வித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஈழத் தமிழ் மருத்துவர் ஒருவரே இவ்வாறு சிறுவர்களுடன் நெருங்கிப் பழகவும் அவர்களுக்கான நிதி திரட்டவும் இசையை பயன்படுத்தி வருகின்றார்.

ரெஜின் ராஜேந்திரம் என்ற சிறுவர் நல நிபுணத்துவ மருத்துவர் கடந்த சில ஆண்டுகளாகவே இசை ஆல்பங்களை வெளியிட்டு வருகின்றார்.

இசை ஆல்பங்களின் ஊடாக கிடைக்கும் வருமானத்தை ஆட்டிசிம் உள்ளிட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான சிகிச்சைகளுக்காக பயன்படுத்தி வருகின்றது.

ரெஜின், மருத்துவர் மட்டுமன்றி ஓர் சிறந்த ராப் இசைக்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

விசேட தேவையுடைய சிறார்களுக்காக பாடல்களை வெளியிட்டு நிதி திரட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2017ம் ஆண்டு முதல் இசை ஆல்பங்களை வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கின்றார்.

நோய்வாய்ப்பட்டுள்ள குழந்தைகள், தாம் ராப் இசைக்கலைஞர் என்பதனால் இலகுவில் தன்னுடன் நட்புறவாகி விடுவதாகவும் இதனால் சிகிச்சை அளிப்பதற்கு இலகுவாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது உறவினர் ஒருவர் ஆட்சிம் நோயினால் பாதிக்கபட்டிருந்தார் எனவும் இதனால் நோயாளிகளின் நிலைமை தமக்கு நன்றாக தெரியும் எனவும் ரெஜின் தெரிவிக்கின்றார்.

இந்த ஆண்டிலும் இசை ஆல்பம் மூலம் ஒரு மில்லியன் டொலர்களை திரட்டுவதற்கு உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.