;
Athirady Tamil News

வெளிநாட்டவர்களுக்கான விசா: வெளியாகியுள்ள முக்கிய தகவல்

0

இலங்கைக்கு பயணம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கையை தனியார் நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறிலங்கா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விசா வழங்கும் நிர்வாக அதிகாரிகள் அரசியல் ஆதிக்கத்தின் கீழ் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்களின் விசா
வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் செயல்முறையின் கீழ், குறித்த நடவடிக்கையின் முழு வருமானமும் இதுவரை நேரடியாக சிறிலங்கா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு கிடைக்கப் பெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், இந்த செயல்முறையை தனியார் நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதன் மூலம், திணைக்களம் பெரும் வருமானத்தை இழக்கும் அபாயம் ஏற்படுமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.