;
Athirady Tamil News

யாழில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

0

யாழ்ப்பாணம் இளவாலை – வசந்தபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்து குடும்பஸ்தர் வெற்றுக் காணி ஒன்றில் இருந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கீரிமலை பகுதியைச் சேர்ந்த ஐயங்கன் சிவானந்தராஜா (வயது 47) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், அவரது குடும்பத்தவர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர்களை பிரிந்து வந்து , இளவாலை – வசந்தபுரம் பகுதியில் உள்ள காணியில் குடிசை ஒன்றை அமைத்து தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது குடிசைக்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.