;
Athirady Tamil News

தேர்தல் நெருங்கும் சமயத்தில் : பிரதமர் மோடி தொடர்பில் பிரபல ஜோதிடரின் கணிப்பு

0

இந்தியாவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரைகள் சூடு பிடித்துள்ளன.கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பரப்புரைகளில் அசுர வேகத்தில் களமிறங்கியுள்ளன.

இந்த நிலையில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமராவாரா மோடி என இந்தியாவை சேர்ந்த பிரபல ஜோதிடரான ருத்ர கரண் பிரதாப் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

மீண்டும் பிரதமராக மோடி
அவர் தனது எக்ஸ் தளத்தில், “வரும் மக்களவை தேர்தலில் பெரும்பான்மையான பலத்துடன் பாஜக ஆட்சியமைக்கும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார்.

ஜோதிட ரீதியாக அவர் தற்போது செவ்வாய் மஹாதிசையை கடந்து வருவதால், நிலம் தொடர்பான விஷயங்களில் சில நடவடிக்கைகளை எடுப்பார். இதன், முதற்கட்டமாக ஏப்ரல் 2025 முதல் செப்டம்பர் 2025 வரையிலான காலத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படும்” என்றார்.

அப்படியே நடந்த கருத்து கணிப்புகள்
இவர் கூறிய கருத்து கணிப்புகள் அப்படியே நடந்ததாகவும் கூறப்படுகிறது.

அவ்வாறு மூன்றாவது முறையாகவும் மோடி பிரதமராக பதவியேற்றால் ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.