;
Athirady Tamil News

கார் விபத்தில் மரணமடைந்த தந்தையும் பிஞ்சு குழந்தையும்… கணினியால் அம்பலமான உண்மை

0

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு தந்தையர் தினத்தில் கார் விபத்தில் சிக்கி தந்தையும் மகளும் மரணமடைந்த விவகாரத்தில், அதில் ஒன்று தற்கொலை என அம்பலமாகியுள்ளது.

உயிருடன் இருந்திருக்க வாய்ப்பில்லை
பிரித்தானியாவில் லிங்கன்ஷயர் பகுதியில் கடந்த ஆண்டு நடந்த மிக மோசமான சாலை விபத்தில் சிக்கி 35 வயதான ஆஷ்லே ஹென்றி மற்றும் அவரது 2 வயது மகள் ஒரியா ஆகியோர் மரணமடைந்தனர்.

இதனையடுத்து பொலிசார் இந்த விவகாரத்தில் விசாரணை முன்னெடுத்தனர். இந்த நிலையில், விபத்து நடக்கும் போது குழந்தை ஒரியா உயிருடன் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே நீதிமன்ற விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆனால் குழந்தை எவ்வாறு இறந்தது என்பது தொடர்பில் மருத்துவ நிபுணர்களால் உறுதி செய்யவும் முடியாமல் போயுள்ளது. உடற்கூறு ஆய்வில், துஸ்பிரயோகத்திற்கு இலக்கான நிலையில் குழந்தை இறந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

அதன் பின்னரே விபத்தும் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது தமது மனைவியிடம் இருந்து ஆஷ்லே ஹென்றி பிரிந்து வாழ்ந்துள்ளார். மேலும் வார இறுதியில் மட்டும் தமது மகளை சந்தித்து வந்துள்ளார்.

அவரது திட்டம் அம்பலம்
சம்பவம் நடக்கும் போது Skegness பகுதியில் தமது மகளுடன் வார இறுதியை ஆஷ்லே செலவிட்டுள்ளார். அங்கிருந்து லிங்கன்ஷயருக்கு திரும்பும் வழியிலேயே, ஜூன் 18ம் திகதி கார் விபத்தில் சிக்கியுள்ளது.

மேலும், அவரது கணினியில் இருந்து மீட்கப்பட்ட குறுந்தகவல் ஒன்றில் இருந்து, அவரது திட்டம் அம்பலமானதுடன், மகளுடன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

கார் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் தமது மகளை ஆஷ்லே கொலை செய்தாரா என்பது தொடர்பில் எந்த ஆதாரமும் அதிகாரிகளிடம் இதுவரை சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.