;
Athirady Tamil News

கொங்கிரீட் சிலை விழுந்து சிறுவன் பரிதாப மரணம்

0

ஹெட்டிபொல, திக்கலகெதர பிரதேசத்தில் சிலை ஒன்று இடிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொங்கிரீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கி சிலை இடிந்து விழுந்ததன் காரணமாகவே 8 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் விசாரணை
இதன்போது, படுகாயமடைந்த நிலையில் குளியாபிட்டிய(Kuliyapitiya) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனின் வீட்டின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த கொங்கிரீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கி சிலையே சிறுவனின் மீது விழுந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.