;
Athirady Tamil News

புங்குடுதீவில் மனித எழும்பு கூட்டு எச்சங்கள் – நாளை அகழ்வு பணி

0

புங்குடுதீவு பகுதியில் மனித எழும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் நாளைய தினம் வியாழக்கிழமை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் , ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது , மனித எழும்பு கூட்டு எச்சங்கள் வெளிவந்தன.

அதனை அடுத்து , கிடங்கு வெட்டும் பணிகளை இடைநிறுத்தி அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதை , அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , அவ்விடத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்து , அவ்விடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர்.

அதன் அடிப்படையில் நாளைய தினம் வியாழக்கிழமை அவ்விடத்தில் நீதவான் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.