;
Athirady Tamil News

பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் பெயரிலான அரங்கு 5.05.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது

0

பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் பெயரிலான அரங்கு , பேராதனைப் பல்கலைக்கழகத்தில்
தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். ஸ்ரீ. பிரசாந்தன் அவர்களின் தலைமையில், 15.05.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது.

பேராசிரியர். சு. வித்தியானந்தன் அவர்கள் தமிழ்த்துறையோடு கொண்டிருந்த உறவின் காரணமாக தமிழ்த்துறைக்கென்று ஒதுக்கப்பட்ட இவ்வரங்கினை அவரது மகள் திருமதி. மகிழ் நங்கை ராஜ்மோகன் அவர்கள் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது. பெயர்ப் பலகையை மூதவை உறுப்பினர் பேராசிரியர் சிறில் விஜேசுந்தர திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலைப்பீடாதிபதி கலாநிதி பிரபாத் ஏகநாயக்க அவர்களும், சிறப்பு விருந்தினராக திருமதி மகிழ் நங்கை ராஜ்மோகன் அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு ஏனைய துறைசார் விரிவுரையாளர்களும், தமிழ்த்துறைசார் விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.