;
Athirady Tamil News

ஜேர்மனியில் இருந்து வெளிநாட்டவர்களே வெளியேறுங்கள்: வைரல் வீடியோ ஏற்படுத்தியுள்ள சர்ச்சை

0

ஜேர்மனியில், இளைஞர்கள் சிலர் இனவெறுப்புப் பாடல் ஒன்றைப் பாடும் வீடியோ வைரலாகியுள்ளதைத் தொடர்ந்து, பொலிசார் அது தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

வைரல் வீடியோ
ஜேர்மனிக்கு சொந்தமான Sylt என்னும் தீவில் அமைந்துள்ள மதுபான விடுதி ஒன்றின் வெளியே இளைஞர்கள் சிலர் பாடல் ஒன்றைப் பாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

அந்த இளைஞர்கள், பிரபல பாடல் ஒன்றின் வரிகளை மாற்றி, வெளிநாட்டவர்களே வெளியேறுங்கள், ஜேர்மனி ஜேர்மானியர்களுக்கே… வெளிநாட்டவர்களே வெளியேறுங்கள் என பாடுவதை அந்த வீடியோவில் காண முடிகிறது.

அத்துடன், ஒருவர் ஹிட்லர் போல மீசை வைத்துக்கொண்டு, நாஸி சல்யூட் அடிக்க, யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, ஜேர்மன் பொலிசார் அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.