;
Athirady Tamil News

அடுக்குமாடி குடியிருப்பில் பற்றிய தீ..14 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்

0

வியட்நாம் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியான பரிதாபம் சோகத்தை ஏற்படுத்தியது.

தலைநகர் Hanoiயில் உள்ள Cau Giay மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டிடத்தில் இருந்து புகை மற்றும் நச்சு வாயுக்கள் வெளியேறின. நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வெளிப்புற வாயிலின் பூட்டு, சன்னலை உடைத்து உள்ளே சிக்கியிருந்த 7 பேரைக் காப்பாற்றினர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 14 பேர் உடல் கருகி பலியாகினர்.

ஹனோய் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ”அதிகாலை 1.26 மணியளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. மீட்புப் படையினர் உயிரிழந்த 14 பேரின் உடல்களை மீட்டனர். உயிர்பிழைத்த மூவர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்தது.

தீ விபத்து ஏற்பட்டபோது உள்ளே எத்தனை பேர் இருந்தனர் என்பது தெரியவில்லை. கட்டிடத்தின் உரிமையாளர் தனது மருமகளையும் ஒரு பேரக்குழந்தையையும் தீயில் இருந்து மீட்டதாக கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.