;
Athirady Tamil News

யாழில் இளைஞர், யுவதிகளுக்கு உறுதி அளித்த ஜனாதிபதி ரணில்!

0

இந்த ஆண்டிற்குள் (2024) இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டு இளைஞர், யுவதிகளின் தொழில் பிரச்சினை தீர்க்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, மீண்டும் ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கும் வகையில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நவீன விவசாயத்தைக் கிராமத்திற்கு கொண்டுச் செல்வதற்கான வேலைத்திட்டம் 2025ல் இருந்து ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாழ். மாவட்ட மாநாட்டிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மேலும், யாழ்.மாவட்ட இளைஞர் யுவதிகளின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் நேரடியாக கூறுவதற்கான சந்தர்ப்பமும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தாவது,

சுற்றுலா வர்த்தகத்தை பலப்படுத்துவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. வலுசக்தி குறித்தும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

கிளிநொச்சி, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் மூலமான மின்சார உற்பத்தியை செய்வதற்கான சாத்தியங்களும் உள்ளன.

அதனால் கிகாவோட் அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். குளங்கள் மீது சூரிய சக்தி படலத்தை அமைத்து அதனூடாக மின்சாரம் தயாரிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்துகிறோம் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.