;
Athirady Tamil News

யாழில். உள்ள உணவகத்தில் வேலை செய்த ஏறாவூரை சேர்ந்தவர் உயிரிழப்பு

0

யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்த மட்டக்களப்பை சேர்ந்த நபர் திடீர் சுகவீனம் காரணமாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

ஏறாவூரை சேர்ந்த முகமது ஹனிபா முகமது சமீர் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.

புத்தூர் பகுதியில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்த குறித்த நபர் திடீர் சுகவீனமுற்ற நிலையில், அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சமயம் வழியில் உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ் . போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.