நரேந்திர மோடியை சத்தித்த நாமல்

இந்திய புதுடில்லியில் நேற்று (08) நடைபெற்ற ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2025இன் போது, இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் ( Narendra Modi) சந்தித்துள்ளார்.
இந்தியத் தலைவருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை தமது X பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை வழிநடத்துவதில் மோடியின் தலைமையைப் பாராட்டியுள்ளார்.
பொருளாதாரம் வேகமாக வளர்ந்து…
இந்தியா நவீன உலகில் அதிக உயரங்களை எட்டியுள்ளது,
Was glad to meet Indian Prime Minister Shri @narendramodi Ji on the sidelines of #RisingBharatSummit2025 today. India has reached greater heights in the modern world under his firm leadership with its economy rapidly growing further.@News18India pic.twitter.com/9kIqZDT8Y5
— Namal Rajapaksa (@RajapaksaNamal) April 8, 2025
அதன் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று ராஜபக்ச தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 2025 ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில் பிராந்தியத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் மற்றும் வணிகத் தலைவர்கள் பங்கேற்றனர்.