கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் புதன் ஒன்றுகூடல்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் புதன் ஒன்றுகூடல் 23.04.2025 காலை 08.30 மணிக்கு கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் அதிதி பேச்சாளராக யாழ்ப்பாண தேசிய கல்வியியற் கல்லூரியில் இருந்து அண்மையில் இளைப்பாறுகை பெற்ற திருமதி. ஜெயலட்சுமி உதயகுமார் கலந்து சிறப்பித்தார்.
கணித விஞ்ஞான நெறி ஆசிரிய மாணவர்களின் ஏற்பாட்டில் திருமதி. கீற்றா தவராசா நெறிப்படுத்தலில் நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் ஈஸ்டர் ஞாயிறு சிறப்பம்சமாக உரை இடம்பெற்றது. இதனை விஞ்ஞான நெறி ஆசிரிய மாணவி திருமதி. பெலினி சசிராசன் ஆற்றினார். இதனைத்தொடர்ந்து இயேசுவின் திருப்பாடுகளின் காட்சிகள் காணொளி மூலம் காட்சிப்படுத்தப்பட்டன.
சித்திரச்சதையம் திருநாவுக்கரசு நாயனார் குரு பூசையாக அமைந்த சிறப்பை வெளிப்படுத்தி விஞ்ஞான நெறி ஆசிரிய மாணவர் திரு. இளகுநாதன் செந்தூர்ச்செல்வன் *”என் கடன் பணி செய்து கிடப்பதே”* என்ற பொருளில் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து அதிதிப்பேச்சாளருக்கான அறிமுக உரையை கலாசாலையின் உப அதிபர் திருமதி. சத்தியா ரஜ்ஜித் அம்மையார் மேற்கொண்டார்.
அதிதியாக கலந்து கொண்ட திருமதி. ஜெயலட்சுமி உதயகுமார் தனது வாழ்வியல் அனுபவங்களை குறிப்பிட்டதோடு *ஆசிரியரும் மென்திறன்களும்* என்ற கருப்பொருளில் உரையாற்றினார். அதிதி கலாசாலை முகாமைத்துவ குழுவினரால் கௌரவிக்கப்பட்டார்.