;
Athirady Tamil News

யாழில். போதையில் அதிக மாத்திரைகளை உட்கொண்டவர் உயிரிழப்பு

0

போதையில் அதிக மாத்திரைகளை உட்கொண்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 77 வயதான முதியவர் கடந்த 4ஆம் திகதி இரவு நிறை போதையில் வீட்டுக்கு வந்து உடல்நலம் சரியில்லை என கூறி வீட்டில் இருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளார்.

மறுநாள் அவர் மயக்கமான நிலையில் காணப்பட்டமையால் , வீட்டார் யாழ் . போதனா வைத்தியசலையில் அனுமதித்த நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.