;
Athirady Tamil News

தூக்கத்தில் அரச ஊழியரான பெண் மரணம் ; பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்

0

மாத்தளை, தம்புள்ளை, பிரதேசத்தில் தூக்கத்தில் மரணமடைந்ததாகக் கூறப்படும் ஒரு பிள்ளையின் தாயின் பிரேத பரிசோதனையில், அவரது மரணம் ஒரு கொலை என்று தெரியவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மரணம் தொடர்பில் சாட்சியமளிக்க வந்த இறந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தூக்கத்தில் இறந்துவிட்டதாக பொலிஸாருக்கு தகவல்
இறந்தவர் 34 வயதானவர். அவர் ஒரு பிள்ளையின் தாயார், அவர் தித்தவெல்கொல்ல பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அவர் கலேவெல வலயக் கல்வி அலுவலகத்தில் மேலாண்மை சேவை அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.

கடந்த 13 ஆம் திகதி தம்புள்ள, தித்தவெல்கொல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அறையில் ஒரு பெண் தூக்கத்தில் இறந்துவிட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

தனது மனைவி தேர்வுக்காக படித்துவிட்டு மாலை 4.00 மணியளவில் படுக்கைக்குச் சென்றதாகவும், இரவு 9 மணியளவில் அவரை எழுப்புமாறு தெரிவிக்கப்பட்டதாகவும் அவரது கணவர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இரவில் தனது மனைவியை எழுப்பச் சென்றதாகவும், ஆனால் அவள் எழுந்திருக்காததால், அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்று நினைத்து 1990 ஆம்புலன்ஸ் சேவையை அழைத்ததாகவும் அவர் பொலிஸாரிடம் அப்பெண்ணின் கணவன் கூறியிருந்தார்.

பெண்ணின் மரணத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.