;
Athirady Tamil News

158 பயணிகளுடன் கொழும்பிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திடீர் ரத்து!

0

ஒரு பறவை மோதியதை அடுத்து, கொழும்பிலிருந்து சென்னைக்கு 158 பயணிகளுடன் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் இன்று (7) ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விமான நிறுவனம் விமானத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதுடன் அனைத்து பயணிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

விமானத்தில் பறவை மோதியதை அடுத்தே விமான ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.