;
Athirady Tamil News

டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.58 கோடியை இழந்த மும்பை தொழிலதிபர்: 3 பேர் கைது

0

மும்பை: மும்பை தொழில​திபர் ஒருவர் டிஜிட்​டல் கைது மோசடி கும்​பலிடம் சிக்கி ரூ.58 கோடியை இழந்​துள்​ளார். இது தொடர்​பாக கைது செய்​யப்​பட்ட 3 பேரிடம் தீவிர விசா​ரணை நடை​பெறுகிறது.

நாட்​டில் டிஜிட்​டல் கைது மோசடி சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​கின்றன. அந்த வகை​யில், கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி 72 வயதான மும்பை தொழில​திபர் ஒரு​வரிடம் மோசடி கும்​பல் செல்​போனில் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்​ளனர். அமலாக்​கத் துறை மற்​றும் சிபிஐ அதி​காரி​கள் என கூறிக் கொண்ட அவர்​கள், சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை வழக்​கில் உங்​கள் மீது குற்​றம்​சாட்​டப்​பட்​டுள்​ளது என கூறி​யுள்​ளனர்.

மேலும், அந்த நபரை​யும் அவருடைய மனை​வியை​யும் டிஜிட்​டல் கைது செய்​துள்​ள​தாக தெரி​வித்த அவர்​கள், தாங்​கள் சொல்​லும் வங்​கிக் கணக்​கு​களில் பணம் செலுத்​தி​னால் வழக்​கி​லிருந்து தப்​பிக்​கலாம் என கூறி​யுள்​ளனர். மேலும் இதுபற்றி காவல் துறை​யில் புகார் செய்​யக்​கூ​டாது என்​றும் மிரட்டி உள்​ளனர். தொடர்ந்து 2 மாதங்​களாக அவர்​களை வீடியோ அழைப்பு மூலம் கண்​காணித்து வந்​ததுடன், பல்​வேறு தவணை​களாக ஆர்​டிஜிஎஸ் பரிவர்த்​தனை மூலம் ரூ.58 கோடியை பறித்​துள்​ளனர்.

ஒரு கட்​டத்​தில் தாங்​கள் ஏமாற்​றப்​பட்​டுள்​ளோம் என்​பதை உணர்ந்த தொழில​திபரும் அவரது மனைவியும் கடந்த வாரம் இணை​ய​வழி குற்​றப் பிரி​வில் (சைபர் கிரைம்) புகார் செய்​துள்​ளனர். இதுகுறித்து பார​திய நியாய சன்​ஹிதா மற்​றும் தகவல் தொழில்​நுட்​பத் துறை சட்​டத்​தின் பல்​வேறு பிரிவு​களின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்​துள்​ளனர்.

.

இதையடுத்து நடத்​திய விசா​ரணை​யில் 88 வங்​கிக் கணக்​கு​களுக்கு பணம் செலுத்​தப்​பட்​டது தெரிய​வந்​துள்​ளது. மேலும் இந்த மோசடி​யில் ஈடு​பட்ட 3 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். டிஜிட்​டல் கைது மூலம் அதிக அளவில் பறிக்​கப்​பட்ட சம்​பவங்​களில் இது​வும் ஒன்று என போலீ​ஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.