;
Athirady Tamil News

தாளையடி கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு கோரிக்கை

0

வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு வருபவர்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரை பகுதிக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாளாந்தம் வருகை தந்து பொழுதை கழிப்பதுடன், அதில் பலர் கடல் விளையாட்டுக்களிலும் ஈடுபடுகின்றனர். அத்துடன் புகைப்படங்கள் எடுப்பது, கடலில் குளிப்பது நீச்சல் அடிப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் பலமான காற்று வீசுவதுடன், கடலும் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகின்றது.

ஆகவே தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு யாரும் கடலுக்குள் இறங்க வேண்டாம் எனவும், கடலுக்கு மிக அண்மித்த பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.