;
Athirady Tamil News

லண்டனில் தமிழீழ தேசிய கொடிநாள் வாரம் அனுஷ்டிப்பு

0

லண்டனில் தமிழீழ தேசிய கொடிநாள் வாரத்தை முன்னிட்டு, நாடு கடந்த தமிழர் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் நினைவு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக கொடி நாள் இடம்பெற்றது.

ஞாயிற்றுக்கிழமை (23.11.2025) பிற்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை லண்டன் டிராபிளாகர் சதுக்கத்தில் (Trafalgar Square) தமிழர்கள் பெருந்திரளாகக் கூடி கொடிநாள் அனுஷ்டிப்பை கௌரவத்துடன் கொண்டாடினர்.

புலிக்கொடியை ஏந்தியவாறு மக்கள் பேரணியாக நகர்ந்ததுடன், சதுக்கத்தை நோக்கி அணிவகுத்து சென்றனர். பின்னர் தமிழீழ தேசியக் கொடி உயர்த்தப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அனைத்து வயதினரும் ஒருங்கிணைந்து பங்கேற்ற இந்நிகழ்வு, தமிழர் சமூகத்தின் தேசிய உணர்வையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.