;
Athirady Tamil News

சீரற்ற காலநிலையால் யாழில் இதுவரை 51,879 நபர்கள் பாதிப்பு

0

யாழில். கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 ஆயிரத்து 312 குடும்பங்களைச் சேர்ந்த 51 ஆயிரத்து 879 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு 2 வீடுகள் முழுமையாகவும் 322 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

அதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 46 இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு 4ஆயிரத்து 040 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.