;
Athirady Tamil News

தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தக விவகாரம் ; பிரதமருக்கு நாமல் கூறிய விடயம்

0

தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் காணப்பட்ட தவறுகள் தொடர்பில் அமைச்சு அதிகாரி ஒருவர் பதவி விலகுவதை விட, பிரதமர் ஹரிணி அமரசூரியவே பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பாடப்புத்தக விவகாரம் தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளமை தொடர்பில் நாமல் ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார்.

வேடிக்கையான முறைப்பாடு
மேலும், அமைச்சிற்கு வெளியே உள்ள ஒருவரால் இந்தப் புத்தகத்தை அச்சிட முடியாது என்றும், அமைச்சிற்குள்ளேயே தான் இது அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறி முறைப்பாடு செய்வது வேடிக்கையானது” என அவர் கூறினார்.

அமைச்சின் செயலாளரை யாரும் ஏமாற்ற முடியாது என்றும், ஒரு தனிநபர் ஒரு பாடப்பரப்பு தொடர்பாக தன்னிச்சையான முடிவுகளை எடுக்க முடியாது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.