யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா மூன்றாம் நாள் அமர்வுகள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா மூன்றாம் நாள் அமர்வுகள் இன்று(21) சனிக்கிழமை நடைபெற்றது.
கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகிய இப் பட்டமளிப்பு வைபவம் 12 அமர்வுகளாக இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றது.
இந்த முறை 3ஆயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
இப் பட்டமளிப்பு வைபவம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது வேந்தர் தகைசால் பேராசிரியர் இ. குமாரவடிவேல் தலைமையில் நடைபெற்று வருகிறது.

