;
Athirady Tamil News

அவசர கால நிலை: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை !!!

0

அவசர கால நிலையை பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

வேலைநிறுத்தம் மற்றும் பொது மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அவசர கால சட்டம் தீர்வாகாது என சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இந்த போராட்டங்களை ஒடுக்குவதற்கும் போராட்டக்காரர்களை கைது செய்யவும் தடுத்து வைக்கவும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தும் வர்த்தமானியை மீளப்பெற்று மக்களின் அமைதியான முறையில் ஒன்று கூடும் சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்த முன்வர வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியை கோரியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.