;
Athirady Tamil News

சர்வதேச மன்னிப்புச்சபையின் குற்றச்சாட்டு !!

0

பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டமையானது தன்னிச்சையானதும் சட்டவிரோதமானதுமாகும் என சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உரிமைகளை இலங்கை அதிகாரிகள் மதிக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

மனித உரிமைகளை அமைதியான முறையில் செயல்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் யாமினி மிஸ்ரா அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.