“பதவியில் இருந்து நீக்காவிடின் பங்கேற்க மாட்டோம்” !!

வௌ்ளிக்கிழமை (29) நடைபெறவிருக்கும் சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகிய இருவரையும் அமைச்சுப் பொறுப்புகளில் இருந்து உடனடியாக நீக்குமாறும், நீக்காவிடின் சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.