பாரதியாரின் 104-வது நினைவு தினம்: யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல்
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104வது நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நேற்று(11) நினைவேந்தல் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, சுப்பிரமணிய பாரதியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன்போது தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

