;
Athirady Tamil News
Daily Archives

18 March 2024

கனடாவில் இடம்பெற்ற வினோத சம்பவம்

கனடாவில் நபர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக அவருக்கே கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட வினோத சம்பவம் இடம்பெற்றுள்ளது. மொன்றியாலைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு இறந்து விட்டதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. நிக் பெட்ரோயூரஸ் என்ற நபர்…

ஐ.நா சபையில் பாகிஸ்தானை புறக்கணித்த இந்தியா!

முஸ்லிம்கள் மீதான வெறுப்புணா்வுக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட வரைவு தீா்மானம் மீது வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வரைவுத் தீா்மானத்துக்கு ஆதரவாக 115 நாடுகள் வாக்களித்துள்ள நிலையில், எந்தவொரு…

திடீரென ஏற்பட்ட காட்டுத் தீ… அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட சுமார் 11 கிராமங்களின்…

சீனா - சிச்சுவான் மாகாணத்தில் உள்ள காட்டுப் பகுதியில் ஒன்றில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதன்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் காட்டுத்தீ மளமளவென பரவியது. இந்த தீ விபத்து கடந்த வெள்ளிக்கிழமை (15-03-2024) மாலை பைசி என்ற கிராமத்தின்…

மட்டக்களப்பில் 37 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பிரச்சினை தொடர்பாக நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 37 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் வி.தியாகேஸ்வரன் முன்னிலையில் இடம்பெற்ற இவ் வழக்கு…

உலக நாடுகளுக்கு பேராபத்து: பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய உளவுக் கப்பல்

பாகிஸ்தான் கடற்படையினருக்கு சீனா தனது முதல் உளவு கப்பலை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பி.என்.எஸ். ரிஸ்வான் என்ற 87 மீட்டர் நீளமுள்ள குறித்த கப்பல், ஏவுகணைகள் ஏவுவதை கண்காணிப்பதற்கும், உளவுத் துறையின் சேகரிப்பு பணிகளை…

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர் : மகள் அனுப்பியுள்ள உருக்கமான இரங்கல் செய்தி

கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று (17.03.2024) இடம்பெற்றுள்ளன. மார்ச் 6 ஆம் திகதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 இலங்கையர்கள் உட்பட 6 இலங்கையர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

வெளிநாட்டு மோகத்தால் கோடிக்கணக்கான பணத்தை இழக்கும் தமிழர்கள்

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி வடமாகாணத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. 2023ஆம் ஆண்டில் 254 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் 139 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், மன்னார்,…

தமிழிசை செளந்தரராஜன் ராஜிநாமா கடிதம்!

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தனது பதவியை ராஜிநாமா செய்தவதாக குடியரசுத் தலைவருக்கு திங்கள்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார். மக்களவைத் தேர்தலில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட விருப்பம்…

அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பு

பொருட்களின் விலை அதிகரிப்பு வீதத்தை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம். ஆனால் தற்போதைய நிலைமை சரியாகிவிட்டது என்று அர்த்தப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே…

எரிபொருள் பவுசருடன் போருந்து மோதி பயங்கர விபத்து… 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ல ஹெல்மண்ட் மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள்…

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு : நோயாளர்கள் விசனம்

அம்பாறை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்களின் பணிபகிஸ்கரிப்பு காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் எந்தவொரு வைத்திய சேவைகளும் இடம்பெறாது இடை நிறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக நோயாளிகள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு…

மொத்தம் 114 மில்லியன் வாக்காளர்கள்! புடினுக்கு எதிரான Noon.. குவிக்கப்பட்ட பாதுகாப்பு,…

ரஷ்யாவின் மாஸ்கோவில் வாக்குச்சாவடிகளுக்கு வெளியே பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் பலர் குவிக்கப்பட்டுள்ளனர். 114 மில்லியன் வாக்காளர்கள் மறைந்த எதிர்க்கட்சி ஆர்வலர் அலெக்ஸி நவல்னியினால் ''Noon against Putin'' எதிர்ப்பு ஆரம்பத்தில்…

சிறைச்சாலைகளிலும் பொலிஸாரால் நீதிக்கு புறம்பான கொலைகள் : ஜெனீவாவிற்கு அறிக்கை

கைதிகளின் உரிமைகளுக்காக வாதிடும் இலங்கையின் முன்னணி அமைப்பு ஒன்று, இலங்கை பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு விசேட அறிக்கையொன்றை…

மேற்கத்திய நாடுகள் உக்ரைனில் களமிறங்கும் நேரம் இது: பிரான்ஸ் ஜனாதிபதி வெளிப்படை

மேற்கத்திய நாடுகளின் படைகள் உக்ரைனில் களமிறங்கும் தேவை அதிகரித்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகளின் படைகள் ஜேர்மன் மற்றும் போலந்து தலைவர்களை சந்தித்த பின்னரே மேக்ரான் குறித்த கருத்தை பதிவு…

ரிஷி சுனக்கை பதவியிலிருந்து விலக்க இரகசிய பேச்சுவார்த்தை நடத்தும் எம் .பி க்கள் !

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை பதவியிலிருந்து வெளியேற்றிவிட்டு புதிய பிரதமராக ஒரு பெண்ணை நியமிக்க ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் பலம்பொருந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள்…

கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பேருந்து சேவை

கிளிநொச்சி கல்மடு நகர் றங்கன் குடியிருப்பில் உள்ள எழுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பிரதேச மக்களின் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு புதிய பேருந்து சேவை ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த பேருந்து சேவையானது இன்று…

யாழ்.பல்கலை ஊழியர் சங்கம் நாளை போராட்டம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் ஊழியர் சங்கத்தின் இணைச்செயலாளர் த. சிவரூபன் ஊடகங்களுக்கு அனுப்பி…

பசுமை அமைதி விருதுகள் விழா

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (17.03.2024) கோலாகலமாக நிகழ்ந்தேறியுள்ளது. மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைச் சூழல்பாதுகாப்புச் செயற்பாடுகளில்…

கொல்கத்தாவில் 5 மாடி கட்டடம் இடிந்ததில் 2 பேர் பலி

கொல்கத்தாவில் கட்டப்பட்டு வந்த 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியானார்கள். மேற்கு வங்க மாநிலம், கார்டன் ரீச் பகுதியில் கட்டப்பட்டு வந்த 5 மாடி கட்டடம் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளில் சிக்கி…

கேரளத்தில் 75 நாள்களில் 6,744 பேருக்கு அம்மை நோய் பாதிப்பு, 9 பேர் பலி

கேரளத்தில் 75 நாள்களில் அம்மை நோய்க்கு 9 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அங்கு அம்மை நோய் பாதிப்புகள் கடந்த சில நாள்களாக…

உணவு ஒவ்வாமையால் மூவர் ஆபத்தான நிலையில்!

உலர் அரிசியில் தயாரிக்கப்பட்ட அக்கல சாப்பிட்ட மூவர் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூவரும் ஆபத்தான நிலையில் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார்…

இஸ்ரேலின் திடீர் தாக்குதல்! ஒரே நாளில் கொல்லப்பட்ட 18 ஹமாஸ் போராளிகள்

மத்திய காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட வான் தாக்குதலில் 18 ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு ஒக்டோபர் 7-ந் திகதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது.…

யாழில். விளையாட்டு போட்டியில் ஐஸ் கிறீம் விற்றவருக்கு 42 ஆயிரம் தண்டம்

பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது , சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம் விற்பனை செய்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு 42 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் விளையாட்டு…

வெடுக்குநாறியில் கைதானவர்களை விடுவிக்க கோரி நாளை யாழில் போராட்டம்

தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள - பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரியும், வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நெடுங்கேணிப் பொலிஸாரால் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யுமாறு…

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக வடக்கில் 254 கோடி ரூபாய் மோசடி

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி வடமாகாணத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு 254 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பில் 139 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்னர். யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ் மற்றும்…

சிறிய செயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.– வடக்கு மாகாண ஆளுநர்…

சிறிய செயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.– வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு. நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், சிறியசெயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண…

அமெரிக்காவில் இரத்த ஆறு ஓடும் : ட்ரம்ப் பகிரங்க மிரட்டல்

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் அமெரிக்க வரலாற்றில் "மிக முக்கியமான நாள்" எனவும் தம்மை அதிபராக தெரிவு செய்யாவிட்டால் அமெரிக்காவில் இரத்த ஆறு ஓடும் என்று டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

பதவி விலகினார் இரான் விக்ரமரத்ன

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன, பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற (கோப்) குழுவின் உறுப்புரிமையிலிருந்து விலகியுள்ளார். பதவி விலகல் கடிதம் தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் நேற்றைய தினம்…

180 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஏர் இந்தியா நிறுவனம்!

விமான போக்குவரத்து நிறுவமான ஏர் இந்தியா 180 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. இது நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 1 சதவிகிதம் என தெரிவித்துள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை கடந்த 2022 இல் டாடா நிறுவனம்…

ஹமாஸ் அமைப்பின் மூன்றாம் நிலை தளபதி கொல்லப்பட்டாரா..!

ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவின் துணைத் தளபதியும், காஸாவிலுள்ள அந்த அமைப்பின் மூன்றாவது மூத்த அதிகாரியுமான மர்வான் இசா, கடந்த வாரம் இஸ்ரேலிய விமானங்கள் நடத்திய தாக்குதல் இடத்தில் இருந்ததாக பலஸ்தீனிய வட்டாரங்கள் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட…

யாழில். பூட் சிற்றி உரிமையாளருக்கு ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ( food city) ஒன்றின் உரிமையாளருக்கு யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றால் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் உள்ள இரண்டு பல்பொருள்…

யாழில். கட்டுமரம் – படகு விபத்து ; கடற்தொழிலாளி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் கட்டுமரத்தில் மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த கடற்தொழிலாளரின் கட்டுமரத்தை இனம் தெரியாத நபர்களின் படகு மோதி விபத்தினை ஏற்படுத்தியதில் கடற்தொழிலாளி உயிரிழந்துள்ளார். மருதங்கேணியை சேர்ந்த மாரிமுத்து முத்துசாமி…

யாழ். பல்கலை தொடர்பிலும் விசாரணை நடத்தப் பணிப்பு

இன நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும்வகையிலான நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்யுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கல்வி அமைச்சால் கோரப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கோப்பாய்…

நெடுந்தீவில் கைதான 21 தமிழக கடற்தொழிலாளர்களும் விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து , நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்ட நிலையில் கைதான 21 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.…