;
Athirady Tamil News
Monthly Archives

July 2025

காணியை விட்டு வெளியேறுமாறு தையிட்டி விகாரதிபதிக்கு கடிதம்

ஆக்கிரமிக்கப்பட்ட காணியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும் , தவறின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தையிட்டி விகாரையின் விகாரதிபதிக்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார். தையிட்டியில் உள்ள தனது காணியில்…

சாவகச்சேரி பிரதேச சபையின் சபையின் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான கோரிக்கை

சாவகச்சேரி பிரதேச சபையின் சபையின் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான கோரிக்கையை வடமாகாண ஆளுநரிடம் பிரதேச சபையினர் முன் வைத்துள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் பொன்னையா குகதாசன் தலைமையிலான குழுவினர்…

யாழ் . பழைய கச்சேரியை பார்வையிட்ட உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர்

மரபுச் சுற்றுலா மேம்பாடு மற்றும் தொடர்ச்சியாக பேணுதல் என்ற அடிப்படையில் பழைய கச்சேரியினை புனரமைப்பு செய்தல் தொடர்பாக மாவட்ட செயலருடன் உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர் நேற்றைய தினம் திங்கட்கிழமை பழைய கச்சேரியினை பார்வையிட்டு…

கேரள முன்னாள் முதல்வா் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவு

திருவனந்தபுரம்: கேரள அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக நிறைந்திருந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் திங்கள்கிழமை காலமானாா். அவருக்கு வயது 101. மாரடைப்பால் கடந்த 2023, ஜூன் மாதம்…

மாணவனிடம் சிக்கிய பெரும் ஆபத்தான பொருளால் பரபரப்பு

காலி மாவட்டம், அம்பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள மாதம்பாகம, தேவகொட, ஸ்ரீரத்ன மாவத்தையில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. கைக்குண்டு குறித்த பிரதேசத்தில் வசிக்கும் பாடாசலை மாணவனொருவர், தனது…

தென்னிலங்கையில் திடீரென கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞன் ; வெளியான பகீர் காரணம்

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் ராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட நபர் ஒருவர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியாகொடை பொலிசார் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது…

செம்மணி புதைகுழி தொடர்பில் புலம்பெயர்ந்த தேச பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள் விடுத்த சுவாமி…

இலங்கை செம்மணி புதைகுழி தொடர்பில் சுவாமி சங்கரானந்தா புலம்பெயர்ந்த தேசங்களின் அரசியலில், மக்கள் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, புலம்பெயர்ந்த தேச பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள்…

மும்பையில் வழித்தடத்தைவிட்டு விலகிச்சென்று விபத்துக்குள்ளான விமானம்: பயணிகள் தப்பினா்

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பெய்து வரும் பலத்த மழையால் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏா் இந்தியா விமானம் வழித்தடத்தைவிட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. இதில் அதன் 3 சக்கரங்கள் வெடித்ததுடன் என்ஜின் சேதமடைந்தது.…

உலக சாதனை படைக்க காத்திருக்கும் இலங்கையின் புதிய கட்டிடம்!

கொழும்பு துறைமுக நகரத்தில் புதிய க்ளோத்ஸ் பின் டவர்ஸ்(Clothes pin Towers) திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது. உலகின் மிகப்பெரிய கட்டிடக் கலைப் படைப்பாக கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடிக்க இந்தத் திட்டம் தயாராக இருப்பதாக கூறப்படுகின்றது.…

ஒபாமா கையில் விலங்கு; சிறையில் அடைப்பு! உண்மையில்லை, டிரம்ப் பகிர்ந்த ஏஐ விடியோ!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் கையில் விலங்கிட்டு, சிறையில் அடைக்கப்படுவது போன்ற செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) உருவாக்கப்பட்ட விடியோவை அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதில்…

வங்கதேசத்தில் பள்ளிக் கட்டடம் மீது போா் விமானம் மோதி விபத்து: 20 போ் உயிரிழப்பு; 171 போ்…

டாக்கா: வங்கதேசத்தில் பள்ளிக் கட்டடம் மீது போா் விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் 20 போ் உயிரிழந்தனா். 171 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக வங்கதேச ராணுவத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:…

இந்தோனேசியாவில் பயணிகள் கப்பலில் தீப்பரவல் ; மூவர் பலி

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் பயணிகள் கப்பல் ஒன்று தீப்பிடித்ததில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர். சுமார் 150 பேர் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடர்ந்தும்…

டிரம்புடன் கருத்து மோதல் ; தொலைபேசி எண்ணை மாற்றிய மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான கருத்து மோதலுக்குப் பிறகு, எலான் மஸ்க் தனது தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபைத் தலைவர் மைக் ஜான்சன் இதனை கூறியுள்ளதாக…

புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி வெளியானது

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புலமைபரிசில் பரீட்சை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, 02 ஆவது வினாத்தாள்…

அமெரிக்காவில் MRI பரிசோதனை இயந்திரத்தினுள் இழுக்கப்பட்ட ஒருவர் பலி

அமெரிக்காவின், நியூயோர்க் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில், MRI பரிசோதனை இயந்திரத்தினுள் இழுக்கப்பட்ட முதியவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார். தடிமனான உலோகச் சங்கிலி ஒன்றை அவர் அணிந்திருந்தமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத்…

இலங்கையில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள்

2026 ஏப்ரல் இற்குள் இலங்கையில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் (இ-என்ஐசி) வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று டிஜிட்டல் பொருளாதாரத் துணை அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். டிஜிட்டல் ஐடி அமைப்பை நிறுவுவதை நோக்கமாகக்…

2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு: மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 குற்றவாளிகளும்…

மும்பை: 2006ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. போதுமான ஆதாரங்கள் இல்லாதது மற்றும் கட்டாய ஒப்புதல் வாக்குமூலங்களை மேற்கோள் காட்டி நீதிமன்றம் இந்த…

யாழில் பயங்கரம்; சந்தேகத்தால் மனைவியை எரித்த கணவன்

யாழ்ப்பாணம், வடமராட்சியில் கணவனால் தீமூட்டி எரிக்கப்பட்ட குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடமராட்சி துன்னாலை பிரதேசத்த சேர்த பெண்ணே உயிரிழந்துள்ளார். கடந்த 17ஆம் திகதி 38 வயதான குடும்பப் பெண்ணொருவர் தீயில் எரிந்த…

கோவிட் பெருந்தொற்றின் 5 வருடங்களுக்குப் பிறகு… கொடிய நோயை எதிர்கொள்ளும் சீனா

கோவிட் பெருந்தொற்றுநோய்க்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் மற்றொரு கொடிய நோய் பரவி வருகிறது என்ற தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்களைக் காப்பாற்ற தெற்கு சீன நகரமான ஃபோஷானில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பியுள்ளதாகவும்,…

மூளாயில் தொடரும் பொலிஸ் பாதுகாப்பு

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர், அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் பாதுகாப்பு தற்போது தீவிரமாக நடைமுறையில்…

செம்மணியில் இரு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றும் 07 மனித எலும்பு கூட்டு தொகுதிகள்…

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை 07 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும் "தடயவியல்…

யாழ். மாவட்டத்தில் காணி விடுவிப்புகள் குறித்து எழுந்தமானமாக தகவல்களை கூற கூடாது ;…

யாழ் . மாவட்டத்தில் காணி விடுவிப்புக்கள் தொடர்பிலும் , இன்னமும் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பிலும் மாவட்ட செயலர் எழுந்தமானமாக தகவல்களை கூற கூடாது என மனிதவுரிமை செயற்பாட்டாளர் ஜட்சன் தெரிவித்துள்ளார். வலி. வடக்கில் இராணுவத்தினரின்…

ஈரான் பேருந்து விபத்தில் 21 பேர் உயிரிழப்பு!

தெற்கு ஈரானில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு ஈரானில் பர்ஸ் மாகாணம் ஷைரஸ் பகுதியில் நேற்று (19) 55 பயணிகளுடன் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்றே இவ்வாறு திடீரென வீதியில் கவிழ்ந்து…

‘நயாரா’ நிறுவனம் மீதான ஐரோப்பிய யூனியனின் தடைகள் சட்ட விரோதம்: ரஷியா கண்டனம்

‘இந்தியாவில் செயல்படும் தனது நயாரா எனா்ஜி நிறுவனம் மீது ஐரோப்பிய யூனியன் நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் நியாயமற்றவை மற்றும் சட்ட விரோதமானவை’ என்று ரஷிய எரிசக்தி நிறுவனமான ‘ரோஸ்நெஃப்ட்’ நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.…

யாழ்ப்பாணத்தில் ‘எங்கள் வாழ்வியலில் பனை’ கண்காட்சி ஆரம்பம்!

யாழ்ப்பாணம், நல்லூர், முத்திரைச்சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்காவில் பனை சார் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வானது 'எங்கள் வாழ்வியலில் பனை' என்னும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண கூட்டுறவு…

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது. இன்று காலை யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் குறித்த கூட்டம் நடைபெற்றது. கலந்துரையாடலில் மேலதிக…

போா் நிறுத்த பேச்சு முடக்கம்: மத்திய காஸாவிலிருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு!

போா் நிறுத்த பேச்சுவாா்த்தை முடங்கியுள்ளதால், தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கு மத்திய காஸாவில் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது. பாலஸ்தீனத்தின் காஸா முனையில் போரை நிறுத்துவதற்கு இஸ்ரேல்…

அண்ணன் – தம்பியை திருமணம் செய்த இளம்பெண்…எதற்காக தெரியுமா?

புதுடெல்லி, கணவர் இருக்கும்போது ஒரு பெண் 2 ஆணையோ, மனைவி இருக்கும்போது ஒரு ஆண் 2 பெண்ணையோ திருமணம் செய்வது நம் நாட்டின் சட்டப்படி குற்றமாகும். ஆனால் பழங்குடியின சமூகங்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை பாதுகாப்பதற்கு இந்திய…

வடக்கு ஊடகத்துறையை மேம்படுத்த இந்தியா தொடர்ந்து உதவும்

வடக்கு ஊடகத் துறையிலும் பகிர்ந்தறியும் கற்றல் மற்றும் துறைமட்ட ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு இந்திய தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி தெரிவித்துள்ளார். இந்தியா துணைதூதரகத்தின் ஏற்பாட்டில், “பிரஸ் ஃபார்வர்ட்:…

ஆபரேஷன் சிந்தூரின் போது வீரர்களுக்கு குடிநீர், டீ, ஐஸ்கிரீம் கொடுத்த சிறுவனின் கல்வி செலவை…

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து…

வீட்டாரை மிரட்ட முற்பட்டவர் தீயில் எரிந்து உயிரிழப்பு

மது போதையில் வீட்டாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டு , தனது உடலில் பெற்றோலை ஊற்றி தீ வைக்க போவதாக மிரட்டிய போது அந்நபரின் உடலில் தீ பற்றியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நயினாதீவு பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் , கடந்த 17ஆம்…

உணவருந்திவிட்டு உறக்கத்துக்குச் சென்றவர் காலையில் சடலமாக மீட்பு

உணவருந்திவிட்டு உறக்கத்துக்குச் சென்றவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டத்தைச் சேர்ந்த மாசல் அருளானந்தம் (வயது-76) என்பவரே உயிரிழந்தவராவார். நேற்றுமுன்தினம் சனிக்கிழமை உணவருந்திவிட்டு வீட்டில் உறங்கச்…

யாழில். பாழடைந்த வீட்டில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு

உயிர்கொல்லி போதைப்பொருளை அடிமையான இளைஞன் ஒருவர் பாழடைந்த வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். நகர் பகுதியை அண்மித்த பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞனே , சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார்…

பாகிஸ்தானில் தொடா் மழை: உயிரிழப்பு 200-ஐ கடந்தது

பாகிஸ்தானில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 203-ஐ கடந்துவிட்டதாக அந்நாட்டு பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த மாத இறுதியில் இருந்தே பருவமழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் நாட்டின்…