;
Athirady Tamil News
Monthly Archives

November 2025

தமிழர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய 22 வயது இளைஞனின் மரணம் ; கதறும் குடும்பம்

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார். தொழில்நுட்ப கோளாறு தொழில்நுட்ப கோளாறுக்கு…

யாழில் போதனா வைத்தியசாலையில் சம்பவம்; இப்படியும் மருத்துவர்கள் இருகின்றார்கள் !

யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சில மரணங்கள் பெரும் பேசுபொருளானது. இந்நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு வந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தொடர்பில் மருத்துவர்கள் நடந்துகொண்ட விதம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் வெளியான…

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் விமான நிலையத்தில் கைது

சுமார் 1 கோடி 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற மூவர் விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

10,000 ஆண்டுகளுக்குப் பின் வெடித்த எத்தியோப்பியா எரிமலை! இந்தியாவைச் சூழ்ந்த சாம்பல்…

எத்தியோப்பியா நாட்டில் உள்ள ஹேலி குப்பி எரிமலை 10,000 ஆண்டுகளுக்குப் பின் வெடித்திருக்கும் நிலையில், அதன் சாம்பல் மேகங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதி வரை சூழ்ந்துள்ளது. இதன்காரணமாக, தில்லி, ஹரியாணா பகுதிகளில் காற்றின் தரம் மேலும்…

எரிமலை வெடிப்பு: சல்ஃபர் டை ஆக்சைடு, கண்ணாடித் துகள்களுடன் நகரும் மேகங்கள்! விமான சேவை…

எத்தியோப்பியா எரிமலை வெடித்துச் சிதறிய நிலையில், சாம்பல் மேகங்களில் சல்ஃபர் டை ஆக்சைடு, கண்ணாடித் துகள்கள் கலந்திருப்பதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியா நாட்டில் உள்ள ஹேலி குப்பி எரிமலை 10,000 ஆண்டுகளுக்குப் பின்…

திருமலை புத்தர் சிலைக்கு எதிரான தீர்மானம் தேசிய மக்கள் சக்தியின் பலத்த எதிர்ப்பினையும்…

திருகோணமலை புத்தர் சிலை மற்றும் தமிழர் தாயகத்தின் இனவிகிதாசாரத்தினையும் வரலாற்றுத்தொன்மையினையும் மாற்றியமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பௌத்த சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்புக்களை அரசு உடன் நிறுத்தவேண்டும் என்ற தீர்மானம் தேசிய மக்கள்…

மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

video link- https://fromsmash.com/LZnrytHXgf-dt அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக அரச மதுபானங்களை விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் (23) மாலை கல்முனை தலைமையக ஊழல் தடுப்புப்…

சூட்சும கடத்தல்: மாசி கருவாடு சம்பல் போத்தலில் போதை மாத்திரை – யாழ்ப்பாணத்தில் 3 பேர்…

கொழும்பில் இருந்து சூட்சுமமான முறையில் போதை மாத்திரைகளை கடத்தி வந்த விற்பனை செய்தவர் உள்ளிட்ட மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் இன்று கைது செய்யப்பட்டனர். மாசி கருவாடு சம்பல் போத்தலுக்குள் மறைத்து போதை மாத்திரைகளை கடத்தி வந்து விற்பனையில்…

துப்பாக்கி மீட்பு -பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம்

ரீ-56 ரக துப்பாக்கி வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதி வீடு ஒன்றில் குசன் கதிரையில் மறைத்து…

செட்டிகுளத்தில் சிறப்பாக நடைபெற்ற தெய்வீக கிராம நிகழ்வு

நேற்றைய தினம் செட்டிகுளம், முகத்தான்குளம் சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் தெய்வீக கிராம நிகழ்வானது சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் வெங்கலச்செட்டிகுள பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் குறித்த நிகழ்வின்…

5 நபர்களை கடித்த பூனை -இறந்த நிலையில் மீட்பு

வீடொன்றில் வளர்க்கப்பட்ட பூனை ஒன்று அப்பகுதியில் உள்ள 5 பேரை கடித்த நிலையில் இறந்த சம்பவம் ஒன்று கல்முனை பகுதியில் பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நகர மண்டப வீதியில் இச்சம்பவம்…

உக்ரைனை வலுப்படுத்தும் சமரசங்களுக்குத் தயாா்: ஸெலென்ஸ்கி

ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவின் திட்டத்தில் உக்ரைனை வலுப்படுத்தக்கூடிய சமரசங்களை செய்துகொள்ளத் தயாா் என்று அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திங்கள்கிழமை தெரிவித்தாா். ஸ்வீடனில் நடந்த நிகழ்ச்சியொன்றி காணொலி…

மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் – ஐரிஷ் வீரரின் பதிவு…

அயர்லாந்து மல்யுத்த வீரரான கானர் மெக்ரேகோர், மரணத்தில் தருவாயில் சென்றபோது இயேசுவை சந்தித்ததாக கூறியுள்ளது வைரலாகியுள்ளது. கானர் மெக்ரேகோர் பிரபல MMA மல்யுத்த வீரரான கானர் மெக்ரேகோர் (Conor McGregor) அயர்லாந்தில் வன்புணர்வு…

நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளிக் குழந்தைகளை விடுவிக்க போப் லியோ வேண்டுகோள்

அபுஜா, ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்குள் துப்பாக்கியுடன் ஆயுத கும்பல் நுழைந்தது. பின்னர்…

அம்பாறையில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் – மக்கள் அவதானம்

video link- https://fromsmash.com/bMrbxFkcu2-dt அம்பாறையில் பெய்து வரும் கனமழையால் கொண்டைவட்டுவான் குளம் நிரம்பி வழிகிறது.இது தவிர அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் துறை…

பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்கள்: சுவிஸ் மாகாணம் ஒன்று திட்டம்

சுவிஸ் மாகாணமொன்று, பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்களைப் பயன்படுத்த திட்டமிட்டுவருகிறது. பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்கள் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணம், பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்களை பயன்படுத்துவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு…

சவளக்கடை கிட்டங்கி வீதியில் மீண்டும் நீர் பரவல் ஆரம்பம்

சவளக்கடை கிட்டங்கி வீதியில் மீண்டும் நீர் பரவி வடிந்தோட ஆரம்பித்துள்ளது தொடர் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் பரவல் காரணமாக கிட்டங்கி வீதி இவ்வாறான நிலைமையை எதிர்கொண்டுள்ளது. அப்பகுதியால் பயணம் செய்பவர்கள் பாதுகாப்பு…

கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் பூர்த்தி

video link- https://fromsmash.com/b1DlYbvywc-dt அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் சிறப்பாக நடாத்த அனைவரும் முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்டம்…

நிந்தவூரில் வெள்ள நிலை ஏற்படுவதை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

கடந்த இரு தினங்களாக இது வரும் அடை மழை காரணமாக மழை நீர் வழிதோட முடியாது தடைபட்டுள்ள வடிகான்களை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை நிந்தவூர் பிரதேச சபை முடுக்கி விட்டுள்ளது. நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளர் எம் ஐ இர்பான் ஆலோசனைக்கு அமைய…

204வது கொடியேற்று விழாவிற்கு பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் அபூபக்கர் ஆதம்பாவா…

முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீஃப் நம்பிக்கையாளர் சபையின் ஒழுங்கமைப்பில் நடைபெற்று வரும் 204வது கொடியேற்று விழாவிற்கு பிரதியமச்சர் வசந்த பியதிஸ்ஸ , பாராளுமன்ற உறுப்பினர் அரசியலமைப்பு…

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி

பெரூட், இஸ்ரேல் - ஹமாஸ் போர் கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கி 2 ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து,…

மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை

கோலாலம்பூர், சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம், மோசடி ஆகியவை அதிகரித்து வருகிறது. உலகளாவிய பிரச்சினையாக பூதாக்கரமாக வெடித்துள்ள இந்த சீர்கேட்டை கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் 16…

கனடாவில் தொடர்ந்து மாயமாகும் பாகிஸ்தான் அரசின் விமான ஊழியர்கள் – என்ன காரணம்?

பாகிஸ்தான் அரசின் விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின்(PIA) ஊழியர்கள் கனடாவிற்கு சென்று அங்கு மாயமாகி வருவது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கனடாவில் மாயமாகும் PIA ஊழியர்கள் PIA நிறுவனத்தின் மூத்த விமானப் பணிப்பெண்ணான…

அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கை க்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்க அதிபர்…

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான அனர்த்த அபாய குறைப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (25.11.2025) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்…

சீரற்ற காலநிலை காரணமாக யாழில் 560 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 171 குடும்பங்களைச் சேர்ந்த 560 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன்போது ஒரு வீடு முழுமையாகவும் 12 வீடுகள் பகுதியளவில்…

பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம்

ஜேர்மனியில் சிரிய அகதிகளுக்கு எதிரான உணர்வு அதிகரித்துவருகிறது. மழலையர் பள்ளிகள் மற்றும் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளைக்கூட உங்கள் நாட்டுக்குப் போங்கள் எனக் கூறுவதால் அகதிகளிடையே கலக்கம் உருவாகியுள்ளது. உங்கள் நாட்டுக்குப் போங்கள் ஒரு…

பூமிக்கு அடியில் சொகுசு பங்களாக்கள் – வைரலாகும் வினோத கிராமம்!

பூமிக்கு அடியில் வடிவமைக்கப்படும் சொகுசு பங்களாக்கள் வைரலாகி வருகிறது. யாவோடாங்குகள் சீனாவில் உள்ள லோஸ் பீடபூமியில் மக்கள் பூமிக்கு அடியில் வசித்து வருகிறார்கள். யாவோடாங்குகள் என்று அழைக்கப்படும் இந்த குகை வீடுகள் சுமார் 2000 முதல் 4000…

நெல்லியடி கொலை – இருவர் கைது

பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞன் வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில் அம்பாறையை சேர்ந்த இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி பகுதியை சேர்ந்த ராஜகுலேந்திரன்…

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிந்ததா?

தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் கசிந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் விடயங்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்று (25)…

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் – 4 ஐயப்ப பக்தர்கள் பலி!

கார் விபத்தில் சிக்கி 4 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர். கார் விபத்து கர்நாடகா, கோலார் மாவட்டத்தில் சபரிமலைக்கு புறப்பட்ட 4 ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் அதிவேகமாக இயக்கப்பட்டதால், மேம்பால தடுப்பில் மோதி கீழே விழுந்து கோர விபத்து ஏற்பட்டது.…

விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் விபத்தில் உயிரிழப்பு

கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 5 வயதான சிறுவன் ஒருவர் வேனில் மோதி உயிரிழந்துள்ளார். வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வீதியை நோக்கி ஓடியபோது வேன் ஒன்று மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.…

பிரித்தானியாவின் ராயல் கடற்படை இடைமறித்த ரஷ்ய எண்ணெய் கப்பல்

பிரித்தானியாவின் கடற்பகுதியில் இரண்டு ரஷ்ய கப்பல்களை ராயல் கடற்படை ரோந்து கப்பல் இடைமறித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. RFN ஸ்டோய்கி பிரித்தானியாவின் ரோந்து நடவடிக்கைகளை சீர்குலைக்கும் முயற்சியாக, அதைக் கண்காணிக்கும் RAF…

அனைத்து இன மாவீரர்களையும் நினைவு கூர வேண்டும்

எமது ஈழ விடுதலை போராட்டத்திற்கு உயிர் தியாகம் செய்த அனைத்து இன மாவீரர்களையும் நினைவு கூர வேண்டும் என்பதுடன், அவர்களின் பெற்றோரையும் கௌரவப்படுத்த வேண்டும் என மூத்த போராளி காக்கா அண்ணா என அழைக்கப்படும் மு. மனோகரன் தெரிவித்துள்ளார். யாழ்.…

பேயை விரட்டுவதாக பதின்ம வயது சிறுமியை எரித்த பெண் பூசாரி ; இலங்கையில் பகீர் சம்பவம்!

வெலிமுவபொத்தானை பகுதியில் 16 வயது சிறுமியின் உடலில் பேய் புகுந்துள்ளதாக கூறி சிறுமியின் உடலில் இருந்து பேயை விரட்டுவதற்கு, சிறுமியின் உடலில் தீ மூட்டிய தேவாலய பெண் பூசாரி, கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரதேசத்தில் தேவாலயத்துக்கு தனது…