;
Athirady Tamil News

இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் !!

0

30 சதவீதமான உரங்கள் ரஷ்யாவிலிருந்து வருவதால் உர விநியோகமும் ஆபத்தை எதிர்கொள்கிறது என்று தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அடுத்த அறுவடைக் காலத்திலும் இலங்கை உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ளப் போகிறது எனவும் எச்சரித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரைவான நிதி முயற்சிக்கு இலங்கை தகுதி பெறாததாலும், இந்திய கடன் வரி அடுத்த மாதம் முடிவடைவதாலும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான தனது வியூகங்களை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்நும் குறிப்பிட்டார்.

சில இலங்கை வங்கியாளர்கள் கொழும்பில்ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், பொருளாதாரம் மேலும் சீரழிந்து போவது குறித்தும் எச்சரித்தார்.

நிதி அமைச்சின் தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து விரைவான நிதி முன்முயற்சி உதவியை கோரியபோதும் இலங்கை அத்தகைய தொகுப்புக்கு தகுதியற்றது என்று தெரிவிக்கப்பட்டது.

“இந்திய கடன் வரி அடுத்த மாதம் முடிவடையும். அதற்கு மேல் உர விநியோகமும் ஆபத்தை எதிர்கொள்கிறது. 30 சதவீதமான உரங்கள் ரஷ்யாவிலிருந்து வருவதால், அடுத்த அறுவடைக் காலத்திலும் இலங்கை ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளப் போகிறது. நாம் உணவுப் பற்றாக்குறையை சந்திக்கப் போகிறோம்“ என்றார்.

மேலும் நிலையான வைப்புத் தொகைகளில் வைத்திருக்கும் நிதிகளின் மதிப்பு மற்றும் ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியங்கள் வைத்திருக்கும் நிதிகளின் மதிப்பு குறைந்தது 59 சதவீதம் குறையும் என்று சுட்டிக்காட்டினார்.

30 வயது நிரம்பிய ஒருவர் இந்த சூழ்நிலையிலிருந்து தப்பிக்க முடியும் என்றும் ஓய்வு பெறவிருக்கும் ஒரு நபர் எப்படி நிலைமையை சமாளிக்க முடியும் எனவும் கேள்வியெழுப்பினார்.

2020 இல் இந்த பொருளாதார நெருக்கடி பற்றி தாம் எச்சரித்தாகவும் 2021 இல் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டும் என்றும் தாங்கள் கூறியதாகவும் ஆனால் அது நடக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

எனவே பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான எமது வியூகங்கள் குறித்து நாங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் மற்றும் பிழைப்புக்கான புதிய திட்டத்தை தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது!!

எங்களுக்கு கோட்டா, மஹிந்த வேண்டும் !!

காலிமுகத்திடலில் பொலிஸாருக்கு பாடமெடுத்தார் மனோ !!

பொலிஸாரிடம் பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை!!

“கொலைக்கார கோட்டா வீட்டுக்குப் போ“ !!

மஹிந்தவின் வீட்டின் முன் பதற்றம் !!

அநாமதேயர்களின் போராட்டம்!!

இரும்புக் கம்பிகளுக்கு நுழைந்து வெளியேறும் மக்கள் !!

ரம்புக்கனை சம்பவத்துக்கு மஹிந்த தனித்து எதிர்ப்பு !!

“கனவுகளுக்கு இறுதி சவப்பெட்டி ஊர்வலம்” !!

கொழும்பு வீதிகளில் இரும்பு வேலிகள் !!

உனக்கு இன்னும் எத்தனை உயிர்கள் தேவை !!

கண்களை விற்று சித்திரம் வாங்க நாம் தயார் இல்லை!!

நான் வழமை போன்றே நலத்துடன் இருக்கின்றேன் !!

நாட்டை மீட்கும் பொறுப்பை ஏற்கத் தயார்!!

நானே பிரதமர்: இல்லையேல் இடைக்கால அரசாங்கம் இல்லை !!

மஹிந்த விலகாவிடின் சஜித்துக்கே ஆதரவு !!

ஊடகத்துறை அமைச்சர் இராஜினாமா !!

துப்பாக்கி சூடு நடத்துமாறு அறிவுறுத்தவில்லை: ஐ.ஜி.பி !!

கால எல்லையை நீடித்தது இந்தியா!!

இலங்கைக்கான நாணய பரிமாற்று காலம் நீடிப்பு!!

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிஸ்மா அதிபர் !!

இலங்கை இந்தியா வசமாகுமா?

சபாநாயகர் விசேட அறிவிப்பு!!

தனது சொத்துக்கள் தொடர்பில் நாமல் விசேட அறிவிப்பு!!

இன்னும் 6 மாதங்கள் செல்லலாம்!!!

பொதுமக்களிடம் வீதி மறியல்களை ஏற்படுத்த வேண்டாம்!!!

“கோட்டா கோ ஹோம்” உடனடியாக நிறுத்தவும் !!

மஹிந்தவை அசைக்க முடியாத யோசனை நிறைவேற்றம் !!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் கறுப்பு, வெள்ளை கொடிகள் !!

நான் பதவி விலகுவேன்: சஜித் !!

21/4 தாக்குதல்: சபையில் ஒருநிமிடம் அஞ்சலி !!

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று!!

13 ஆளும் எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் !!

இராகலை நகரை டயர் புகை சூழ்ந்தது !!

அதிகபட்ச படைகளை பயன்படுத்தி இருப்பின் என்ன நேர்ந்திருக்கும்?

You might also like

Leave A Reply

Your email address will not be published.