;
Athirady Tamil News

33 வார கர்ப்பத்தை கலைத்துக்கொள்ள பெண்ணுக்கு கோர்ட்டு அனுமதி பின்னணி என்ன..!!

0

33 வார கர்ப்பத்தை கலைத்துக்கொள்ள ஒரு பெண்ணுக்கு டெல்லி ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதுபற்றிய பின்னணி விவரங்கள் தெரிய வந்துள்ளன. டெல்லியைச் சேர்ந்த 26 வயதான ஒரு பெண், திருமணத்துக்கு பின்னர் கர்ப்பம் தரித்தார். ஆனால் அந்த பெண்ணுக்கு ‘ஸ்கேன்’ பரிசோதனை செய்து பார்த்தபோது, அவரது கருக்குழந்தை பெருமூளைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இது அவருக்கு மிகுந்த மன வேதனையைத் தந்தது. இப்படிப்பட்ட குழந்தையை பெற்றெடுத்து, அந்த குழந்தை காலமெல்லாம் அவதிகளுடன் மருத்துவ சிகிச்சையை சார்ந்து வாழ்வது மிகக்கொடுமையானது என கருதினார். இதனால் அவர் கருவைக் கலைப்பதற்காக டெல்லி குரு தேக் பகதூர் ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆனால் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தின்படி 24 வாரங்களுக்குள்தான் கருக்கலைப்பு செய்ய முடியும், அவரது கர்ப்பம் 24 வாரங்களைக் கடந்து விட்டதால் கோர்ட்டின் அனுமதி பெற்றுத்தான் கருக்கலைப்பு செய்ய முடியும் என கூறி விட்டனர்.

இதையடுத்து அவர் கருக்கலைப்புக்கு அனுமதி கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். ஐகோர்ட்டு விசாரணை தனது கருக்குழந்தை பெருமூளைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பது, நவம்பர் 12-ந் தேதிதான் தெரிய வந்துள்ளதாக கூறி, தான் கருக்கலைப்பு செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வழக்கில் அந்த பெண் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கை நீதிபதி பிரதிபா எம்.சிங் விசாரித்தார். வழக்குதாரர் தரப்பில் வக்கீல்கள் அன்வேஷ் மதுக்கர், பிராச்சி நிர்வாண் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். விசாரணை முடிந்த நிலையில், வழக்கைத் தொடுத்துள்ள பெண், தனது 33 வார கருவைக்கலைத்துக்கொள்ள அனுமதி அளித்து நீதிபதி பிரதிபா எம்.சிங் நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்தப் பெண் டெல்லி லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆஸ்பத்திரியிலோ அல்லது குரு தேக் பகதூர் ஆஸ்பத்திரியிலோ அல்லது சட்டப்படி அனுமதி பெற்றுள்ள பிற ஆஸ்பத்திரியிலோ கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என நீதிபதி தீர்ப்பில் கூறி உள்ளார்.

இந்த தீர்ப்பில் நீதிபதி கூறி உள்ள முக்கிய அம்சங்கள்:-

* ஒரு கர்ப்பிணி பெண், தனது கர்ப்பத்தை கலைக்கும் உரிமை, உலகமெங்கும் விவாதப்பொருளாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியா தனது சட்டத்தில் இந்த விஷயத்தில் பெண் தேர்வு செய்து கொள்கிற உரிமையை அங்கீகரிக்கிறது.

* துரதிர்ஷ்டவசமாக மருத்துவ குழு, ஊனத்தின் அளவு அல்லது கருக்குழந்தை பிறப்பின் பின்னர் வாழும்விதம் குறித்து குறிப்பிடத்தக்க கருத்து எதையும் வழங்கவில்லை. இதனால், அத்தகைய எதிர்பாராத நிலையில் கர்ப்பத்தை கலைத்துக்கொள்ள விரும்புகிற பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

* அத்தகைய சந்தர்ப்பங்களில், இறுதி முடிவு எடுப்பதில் தாயின் விருப்பத்தை அங்கீகரிக்க வேண்டும். பிறக்காத குழந்தையின் கண்ணியமான வாழ்க்கைக்கான வாய்ப்பை அங்கீகரிகக வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.