;
Athirady Tamil News

யாழில் மின்கம்பி அறுத்ததில் தூக்கி வீசப்பட்ட பெண்

0

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் , மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று சனிக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் வீதி அகலிப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

தூக்கி வீசப்பட்ட பெண்
இந்நிலையில் வீதியோரத்தில் நின்ற பனைமரம் ஒன்று வெட்டப்பட்டபோது மின்சார கம்பி மீது பனைமரம் விழுந்தது. பனை விழுந்ததால் மின்சார கம்பி அறுந்து வீதியில் நின்ற பெண்ணொருவரின் மோட்டார் சைக்கிள் மீது முட்டியதில் மோட்டார் சைக்கிளில் இருந்த பெண் தூக்கி வீசப்பட்டார்.

இதனையடுத்து பாதிக்கபப்ட்ட பெண் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதேசமயம் இந்த சம்பவத்தில் ஐந்து மின் கம்பங்கள் முறிந்து சேதமாகிய நிலையில் அப்பகுதிக்கு மின்சாரம் தடைப்பட்டது. இந்நிலையில் மின்சார இணைப்பினை சீர் செய்யும் நடவடிக்கையில் இலங்கை மின்சார சபையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.