;
Athirady Tamil News

கிளிநொச்சியில் புதையல் தேடி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பம்

0

கிளிநொச்சியில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த புதையல் தோண்டும் அகழ்வு பணி மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அறிவித்திருந்ததற்கு அமைவாக இன்று (22) காலை 9.00 மணியளவில் அகழ்வுப்பணி மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியிலுள்ள திருநகர்ப் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறப்பட்ட தகவல்களை அடுத்து கடந்த 20 ஆம் திகதி அங்கு அகழ்வுப் பணி ஆரம்பமானது.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற அனுமதியுடன், நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகளில் சுமார் 17 அடி வரை நிலம் அகழ்ந்தெடுக்கப்பட்டது.

இவ் அகழ்வு பணிகளின் போது கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் துபராகினி ஜெகநாதன், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர், காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர் எனப் பலரும் கூடியிருந்தனர்.

சுமார் இரண்டு இயந்திரங்களின் மூலம் அகழ்வு பணிகள் நடைபெற்றன.

அகழ்வு இடம்பெற்ற இடத்தில் எந்த வித தடையங்களும் கிடைக்கப்பெறாததால் குறித்த அகழ்வுப்பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து 22ஆம் திகதி காலை 9.00 மணி அளவில் மீண்டும் அகழ்வுப் பணிகள் தொடரும் என நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதற்கு அமைவாக இன்று கிரமசேவகர் முன்நிலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.