;
Athirady Tamil News

இவர்களை தெரியுமா? பொலிஸார் விடுத்த கோரிக்கை!

0

மஸ்கெலியா- நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சபான தோட்டம் எமில்டன் பிரிவில் மூன்று பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போயுள்ள மூவரும் நீர் குழாயொன்றை உடைத்து விட்டதால் வீட்டார் திட்டுவார்கள் என்ற பயத்தில்பாடசாலை செல்வதாகக் கூறி நேற்றைய தினம் (26.10.2023) வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடராஜா நிலூக்ஷன் =15 வயது யோகராஜன் திவாகர் =13 வயது ராஜா சன்தூர் =14 வயது ஆகிய மூன்று மாணவர்களே காணாமல் போயுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தகவல் வழங்கியுள்ளார்.

இவர்களை கண்டால் அருகாமையிலுள்ள பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.