;
Athirady Tamil News

மது போதையில் வலுத்த சண்டை : சக மாலுமியை வெட்டிக்கொன்ற கடற்படை அதிகாரி!

0

மதுபோதையில் வலுத்த சண்டையால் சக மாலுமியை வெட்டிக்கொன்ற சிறிலங்கா கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கத்திக் குத்து காயங்களுக்கு உள்ளான நபர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் போது உயிரிழந்துள்ளதாக, திருகோணமலை வைத்தியசாலை காவல் நிலையத்திற்குக் கிடைத்த தகவலினைத் தொடர்ந்து திருகோணமலைத் துறைமுக காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கடற்படை முகாமில்
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலை கடற்படை முகாமில் கடமையாற்றும் நான்கு மாலுமிகள் தங்கியிருந்த விடுதியில் மது அருந்தியபோது, மது போதையில் உயிரிழந்தவருக்கும் மற்றைய கடலோடிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

நேரம் செல்லச் செல்ல இருவருக்கிடையேயான வாக்குவாதம் வலுத்த நிலையில் மற்றைய இருவரும் அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

கத்தியால் குத்தியதாக
வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபத்தில் இடம்பெற்ற தகராறு காரணமாக சந்தேக நபர் மற்றைய மாலுமியை கத்தியால் குத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் மற்றும் சந்தேக நபர் இருவரும் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் கைதான சந்தேக நபர் 42 வயதுடைய இலங்கை கடற்படை வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.