;
Athirady Tamil News

மேகங்களுக்கு நடுவே ஏலியன் குடும்பம்; விமான பயணி பகிர்ந்த புகைப்படத்தால் அதிர்ச்சி

0

மேகங்களுக்கு நடுவே ஏலியன் போன்ற தோற்றம் கொண்ட புகைப்படத்தை விமான பயணி பகிர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புகைப்பட ஆர்வம்
பொதுவாக விமானத்தில் பயணம் செல்லும் மக்கள் வானத்தில் இருக்கும் அழகை தங்களது மொபைல்களிலோ, கேமராக்களிலோ புகைப்படம் எடுப்பார்கள். அதுவும், ஜன்னல் ஓரம் இருக்கும் பயணிகள் மொபைலில் படம் பிடிக்க ஆர்வமுடன் இருப்பார்கள்.

இது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சில நேரங்களில் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஆனால், சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உண்மையானதாகவும், சில போலியாகவும் இருக்கின்றன.

ஏலியன்
அந்தவகையில், போலந்து நாட்டின் வார்சாவில் இருந்து லண்டனுக்கு சென்றபோது பயணி ஒருவர் விமானத்தின் ஜன்னல் ஓரம் இருந்து புகைப்படங்களை எடுத்துள்ளார். அவர் எடுத்த புகைப்படம் ஒன்றில் நிழல்கள் தெரிவது போல தோன்றின.

அதாவது, மேகங்களுக்கு நடுவில் வேற்று கிரக வாசிகளின் குடும்பங்கள் நிற்பது போல தெரிந்தது. இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த புகைப்படம் உண்மையானதா என்று தெரியவில்லை.

இந்த புகைபபடத்தை எடுத்தவர், அதனை ஏலியன்கள் தொடர்பான அப்டேட்டுகளை ஆவணப்படுத்தி வரும் MUfON என்ற தளத்திற்கு அனுப்பினார். தற்போது, இந்த விவகாரம் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.