;
Athirady Tamil News

கனடாவுக்கு பயணம்; விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழர்!

0

போலி கனேடிய விசாவைப் பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் வைத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

டுபாய் செல்லும் EK-653 – எமிரேட்ஸ் விமானம்
சம்பவத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். டுபாய் செல்லும் EK-653 – எமிரேட்ஸ் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த நிலையில் அனுமதிக்காக அவர் சமர்ப்பித்த ஆவணங்களில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்ட போதே , போலி விசா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.