;
Athirady Tamil News

கருங்கடலில் மாயமான துருக்கிக் கப்பல் : தேடுதல் பணிகள் தீவிரம்

0

துருக்கியில் கடும் புயலுக்கு மத்தியில் 12 பணியாளர்களுடன் கருங்கடல் கடற்கரையில் சென்றுக் கொண்டிருந்த போது துருக்கியின் சரக்குக் கப்பல் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இந்த கப்பலை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்பு பணியில் சவால்
வடமேற்கு துருக்கியின் சோங்குல்டாக் மாகாணத்தில் உள்ள எரெக்லியில் கப்பல் நகர்ந்து கொண்டிருந்ததாக துருக்கி கொடியிடப்பட்ட காஃப்கமெட்லர் கப்பலின் தலைவர் தெரிவித்ததாக மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இப்பகுதியில் நேற்று சக்திவாய்ந்த புயல் வீசியதாகவும், மோசமான வானிலை, காற்று காரணமாக கப்பலை தேடும் பணி சவாலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கப்பலை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாகவும். வானிலை சற்று தெளிவான பின்னர் மீட்பு நடவடிக்கைகளை தொடங்குவதற்கு குழுக்கள் தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.