;
Athirady Tamil News

மீண்டும் ஒரு அனர்த்தம்; பெண்கள் பாடசாலையில் இடிந்து விழுந்த சுவர்

0

கடும் மழை காரணமாக வத்தேகம மகளிர் கல்லூரியின் ஆரம்பப் பிரிவுக்கு அருகாமையில் இருந்த சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது.

கண்டி -வத்தேகம பிரதேசத்தில் நேற்று (20) பிற்பகல் முதல் கடும் மழை பெய்து வருகின்றது.

இரு நாட்கள் பாடசாலைக்கு பூட்டு
இதன் காரணமாக பாடசாலையின் பல கட்டடங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனையடுத்து, பாடசாலை வளாகத்தை இராணுவத்தினர் துப்பரவு செய்து வருவதுடன் மாகாண கல்வி திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய இன்று (21) மற்றும் நாளை (22) பாடசாலையை மூடுவதற்கு பாடசாலை அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததால் பாடசாலை கட்டட வளாகம் குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளது.

அதேவேளை கடந்த வாரம் வெல்லபிட்டிய பாடசாலை மதில் உடைந்து விழுந்ததில் ஆறு வயது சிறுமி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.